உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
மு.வரதராசனார் உரை:
மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
பரிமேலழகர் உரை:
உறு பசியும் – மிக்க பசியும்; ஓவாப்பிணியும் – நீங்காத நோயும்; செறுபகையும் சேராது – புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு – இனிது நடப்பதே நாடாவது. (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.).
உரை:
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.
மணக்குடவர் உரை:
மிகுந்த பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும், சேராது இயல்வது நாடு. இது சேர்தலாகாதன கூறிற்று.
Transliteration:
uRupasiyum Ovaap piNiyum seRupakaiyum
saeraa thiyalvadhu naadu
Translation:
That is a ‘land’ whose peaceful annals know,
Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.
Explanation:
kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.
மறுமொழி இடவும்