மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
மு.வரதராசனார் உரை:
திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) மதி வாழி – மதியே வாழ்வாயாக; மாதர் முகம் போல ஒளி விடவல்லையேல் காதலை – இம்மாதர்முகம் போல யான் மகிழும் வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலையுடையையாதி (‘மறு உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய்’, என்பதாம். ‘வாழி’ இகழ்ச்சிக் குறிப்பு.).
உரை:
முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.
சாலமன் பாப்பையா உரை:
நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.
மணக்குடவர் உரை:
மதியே! நீ இம்மாதர் முகம்போல ஒளிவிட வல்லையாயின் நீயும் எம்மாற் காதலிக்கப்படுதி. வாழி- அசை. இது மறுப்போயினதாய முகமென்று கூறப்பட்டது.
Transliteration:
maadhar mukampoal oLivida vallaiyael
kaadhalai vaazhi madhi
Translation:
Farewell, O moon! If that thine orb could shine
Bright as her face, thou shouldst be love of mine.
Explanation:
If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?.
மறுமொழி இடவும்