நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.
மு.வரதராசனார் உரை:
நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?.
பரிமேலழகர் உரை:
(‘அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்’, என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப – நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை – அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ‘அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே’ என்பதாம்.).
உரை:
நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?.
சாலமன் பாப்பையா உரை:
நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?.
மணக்குடவர் உரை:
நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்: தாம் காதலியாதவிடத்து.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதலர் தாமும் நம்மிடத்தில் காதல் கொள்ளாமற்போனால் நம்முடைய காதலினைக்கொண்டுள்ள காதலர் நமக்கு என்ன இன்பத்தினைச் செய்து விடுவார்?.
Transliteration:
naamkaadhal kontaar namakkevan seypavo
thaamkaadhal kollaak kadai
Translation:
From him I love to me what gain can be,
Unless, as I love him, he loveth me?.
Explanation:
He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?.
மறுமொழி இடவும்