நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
மு.வரதராசனார் உரை:
எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) எம் காதலர் சென்றார் நெருநற்று – எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனி பசந்து எழுநாளேம் – அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம். (‘நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது’ என்பாள், ‘நெருநற்றுச் சென்றார்’ என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். ‘மேனி பசந்து எழுநாளேம்’ என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.).
உரை:
நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.
சாலமன் பாப்பையா உரை:
என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.
மணக்குடவர் உரை:
எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம். இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எம் காதலர் நேற்றுதான் பிரிந்து போனார். அப்பிரிவினால் யாமும் மேனி பசந்து பல நாட்கள் உடையேம் ஆனோம்.
Transliteration:
neru-natruch chendraar-em kaadhalar yaamum
ezhunaalaem maeni pasandhu
Translation:
My loved one left me, was it yesterday?
Days seven my pallid body wastes away!.
Explanation:
It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.
மறுமொழி இடவும்