சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
மு.வரதராசனார் உரை:
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
பரிமேலழகர் உரை:
உறுபடையான் – பெரும்படையுடைய அரசன், சிறுபடையான் செல் இடம் சேரின் – ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின், ஊக்கம் அழிந்து விடும் – அவனால் தன் பெருமை அழியும்.
(‘செல் இடம்’ அவனுக்குச் செல்லும் இடம். ‘அழிந்துவிடும்’ என்பது ‘எழுந்திருக்கும் என்றாற்போல் ஒரு சொல் ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி , இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக,அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.).
உரை:
சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.
மணக்குடவர் உரை:
சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும்படையை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெடும். இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.
Transliteration:
siRupadaiyaan sellidam saerin urupadaiyaan
ookkam azhindhu vidum
Translation:
If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail.
Explanation:
The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.
மறுமொழி இடவும்