உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
மு.வரதராசனார் உரை:
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
பரிமேலழகர் உரை:
உடையர் எனப்படுவது ஊக்கம் – ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃதில்லார் மற்று உடையது உடையரோ – அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார்.
(‘வேறு உடையது’ என்றது, முன் எய்திநின்ற பொருளை. ‘உம்’ மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.).
உரை:
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?.
மணக்குடவர் உரை:
ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை: அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்.
Transliteration:
udaiyar enappatuvadhu ookkam aqdhillaar
udaiyadhu udaiyaroa matru
Translation:
‘Tis energy gives men o’er that they own a true control;
They nothing own who own not energy of soul.
Explanation:
Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?.
மறுமொழி இடவும்