அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
மு.வரதராசனார் உரை:
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் – எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவாராயின்; தெளிந்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ – அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் உண்டோ? (‘தேறியார்’ என்பது தன்னைப் பிறர்போல் கூறல். ‘சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும், அஃது எய்தாவகை அழுங் குவி’ என்பது கருத்து.)
உரை:
பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?.
சாலமன் பாப்பையா உரை:
என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?.
மணக்குடவர் உரை:
நம்மைத் தலையளிசெய்து நின்னிற் பிரியேன். நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப் போவாராயின் அவர் தௌ¤வித்த சொல்லைத் தௌ¤ந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ? தன்மையைப் படர்க்கைபோற் கூறினார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
‘உன்னைவிட்டுப் பிரியேன், அஞ்சாதே’ என்ற தலைவர், தாமே பிரிந்து செல்லுவாராயின் அவர் தெளிவித்த சொல்லை நம்பியவர் மேல் தவறு உண்டோ?.
Transliteration:
aLiththanjal endravar neeppin theLiththasol
thaeRiyaarkku uNdoa thavaru
Translation:
If he depart, who fondly said, ‘Fear not,’ what blame’s incurred
By those who trusted to his reassuring word?.
Explanation:
If he who bestowed his love and said “fear not” should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?.
மறுமொழி இடவும்