அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
மு.வரதராசனார் உரை:
சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.
பரிமேலழகர் உரை:
அற்றாரைத் தேறுதல் ஓம்புக – சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக, அவர் மற்றுப் பற்று இலர் – அவர் உலகத்தோடு தொடர்பு இலர், பழி நாணார் – ஆகலான் பழிக்கு அஞ்சார்.
(‘பற்று இலர்’ என்பதனால் ‘சுற்றம்’ என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.).
உரை:
நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.
மணக்குடவர் உரை:
ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஓரிடத்துப் பற்றுடையாரும் அல்லர், பழிக்கும் நாணாராதலான்.
Transliteration:
atraaraith thaeRudhal Ompuka matravar
patrilar naaNaar pazhi
Translation:
Beware of trusting men who have no kith of kin;
No bonds restrain such men, no shame deters from sin.
Explanation:
Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and therefore have no fear of crime.
மறுமொழி இடவும்