நல்குரவு

குறள் 1041

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. மு.வரதராசனார் உரை: வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே… Read More

7 வருடங்கள் ago

குறள் 1042

இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். மு.வரதராசனார் உரை: வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1043

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. மு.வரதராசனார் உரை: வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1044

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். மு.வரதராசனார் உரை: வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை… Read More

7 வருடங்கள் ago

குறள் 1045

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். மு.வரதராசனார் உரை: வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.… Read More

7 வருடங்கள் ago

குறள் 1046

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். மு.வரதராசனார் உரை: நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1047

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். மு.வரதராசனார் உரை: அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1048

இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. மு.வரதராசனார் உரை: நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1049

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. மு.வரதராசனார் உரை: ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1050

துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. மு.வரதராசனார் உரை: நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும்… Read More

7 வருடங்கள் ago