அறிவுடைமை

குறள் 421

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். மு.வரதராசனார் உரை: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 422

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. மு.வரதராசனார் உரை: மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும். (மேலும்…) Read More

7 வருடங்கள் ago

குறள் 423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. மு.வரதராசனார் உரை: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக்… Read More

7 வருடங்கள் ago

குறள் 424

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. மு.வரதராசனார் உரை: தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 425

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. மு.வரதராசனார் உரை: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக்… Read More

7 வருடங்கள் ago

குறள் 426

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு. மு.வரதராசனார் உரை: உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும். (மேலும்…) Read More

7 வருடங்கள் ago

குறள் 427

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். மு.வரதராசனார் உரை: அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர். (மேலும்…) Read More

7 வருடங்கள் ago

குறள் 428

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். மு.வரதராசனார் உரை: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும். (மேலும்…) Read More

7 வருடங்கள் ago

குறள் 429

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். மு.வரதராசனார் உரை: வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம்… Read More

7 வருடங்கள் ago

குறள் 430

  அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். மு.வரதராசனார் உரை: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக… Read More

7 வருடங்கள் ago